Search This Blog

Friday, May 24, 2024

ஜூன் முதல் ஓட்டுநர் உரிமம் பெற புதிய நடைமுறை!!

0 comments
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு அரசு ஆவணங்களுக்கான நடைமுறைகள் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஓட்டுநர் உரிமங்களை பெறுவதற்காக, வாகன ஓட்டிகள் RTO அலுவலகத்திற்கு அலையாமல் இருக்க, புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளனர். அதன்படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக புதிய நடைமுறையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதாவது இனி உங்கள் ஓட்டுநர் தேர்வை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) எடுக்க வேண்டியதில்லை, அதற்கு பதிலாக ஒரு சான்றளிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் பள்ளியில் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment