Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
நாடு முழுவதுமுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதேபோல பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன. மேலும், கணிசமான தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் கேட் மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. அதனால் இத்தேர்வானது பட்டதாரிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண் செல்லும். அதன்படி 2025-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு வரும் பிப்ரவரி 1, 2 மற்றும் 15, 16-ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்தவுள்ளது. மேலும், தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட உள்ளன.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://gate2025.iitr.ac.in/ எனும் வலைத்தளத்தில் சென்று செப். 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனுடன் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும். மேலும், கூடுதல் விவரங்களை வலைத் தளத்தில் அறியலாம்.
முக்கிய செய்திகள்
-
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்னும் பத்து நா...
-
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூ...
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ .600 கோடியில் காலை உணவுத் திட்டம் ரூ .436 கோட...
-
வங்கி ஊழியர்களின் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட இந்த யோசனையானது வாங்கி சேவைக்காக நீண்ட நேரம் காத்திருப்பது மற்றும் வங...
-
ஓட்டுநர் உரிம விதிகள்: ஜூன் 1 முதல் வாகனம் ஓட்டுவதற்கான விதிகள் மாற உள்ளது. ஏதேனும் தவறு செய்தால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று கூற...
-
பாதாம் பிசின் என்பது பாதாம் மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. பாதாம் பிசின் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்பட்டு வந்தாலும் இத...
-
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் வரவேற்கப்படுகின்ற...
-
ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வ...
-
பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டை தொடர்ந்து 2-ம், 3-ம் ஆண்டு பாடத்திட்டமும் விரைவில் மாற்றப்படுகிறது. இதற்கான வரைவு பாடத்திட்டம் வலைதளத்...
-
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டென்மார்க் சென்று, அந்நாட்டு கல்வித் துறை இயக்குநர்களுடன் கலந்துரையாடி, காலை உண...
IMPORTANT LINKS
Monday, July 29, 2024
Home
விண்ணப்பிக்க
பொறியியல் படிப்புகளுக்கான `கேட்’ நுழைவு தேர்வு: பட்டதாரிகள் ஆக. 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
பொறியியல் படிப்புகளுக்கான `கேட்’ நுழைவு தேர்வு: பட்டதாரிகள் ஆக. 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment