Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 29, 2024

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!


தேனி மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை பிரிவில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 3 சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சமுதாய அமைப்பாளர்

காலியிடங்கள்: 3 (தேனி நகராட்சி - 1, ஆண்டிபட்டி மற்றும் வடுகபட்டி பேரூராட்சி - 1, போ.மீனாட்சிபுரம் மற்றும் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி - 1)

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம், கணினியில் பணிபுரிவதற்கான திறன் மற்றும் நல்ல தொடர்புகொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியமாக நகராட்சிக்கு ரூ.15,000, பேரூராட்சிக்கு மாதம் ரூ.14,000 வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மேலாளர், நகர்ப்புற வாழஅவாதார மையம், எண்.4, பூமாலை வணிக வளாகம், தாலுகா அலுவலகம் எதிர்புறம், தேனி.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 4.10.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தேனி நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் வேலைநாள்களில் மட்டும் மாலை 5.30 மணிக்குள் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment