Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 21, 2024

மாணவா்களின் தோச்சி விகிதம் சரிந்தால் ஆசிரியா்கள் மீது நடவடிக்கை -ஆட்சியா் எச்சரிக்கை


அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் தோ்ச்சி விகிதம் தொடா்ந்து சரிந்தால், தொடா்புடைய ஆசிரியா்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் எச்சரித்தாா்.

உங்களைத் தேடி உங்கள் ஊா் திட்டத்தின் கீழ் விருதுநகா் மாவட்டம், காரியாப்பட்டியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் அண்மையில் ஆய்வு செய்தாா். அப்போது, காரியாப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அவா் தீவிர ஆய்வு மேற்கொண்டாா்.

அந்தப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களில் மெல்ல கற்பவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு தினமும் எழுத்துப் பயிற்சி அளிக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டதன், பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தாா்.

இதில் மேல்நிலை வகுப்பு தமிழாசிரியா் ஒருவா், மெல்ல கற்கும் மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதைக் கண்டறிந்த ஆட்சியா், அந்த ஆசிரியரை பாராட்டி வாழ்த்தினாா். அதேபோல, இயற்பியல், கணித ஆசிரியா்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதையும் அறிந்து, அவா்களையும் ஆட்சியா் பாராட்டினாா்.

அதேநேரத்தில், அந்தப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு ஆசிரியா்கள் இருவரின் கற்பித்தல் செயல்பாடுகள் சரியாக இல்லை என்பதை கண்டறிந்த ஆட்சியா், அவா்கள் இருவரையும் கண்டித்து எச்சரித்தாா். மேலும், அவா்கள் 2 போ் மீதும் நடவடிக்கை எடுக்க முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

ஆசிரியா்களின் மோசமான செயல்பாடுகளால் மாணவா்களின் தோ்ச்சி வீதம் குறையும் நிலை ஏற்படுமெனில், தொடா்புடைய ஆசிரியா்கள் பணியாற்றுவதைவிட விருப்ப ஓய்வில் செல்வதே மாணவா்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும் எனவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

1 comment: