![]() |
| திரு. ஜெகன் மோகன் ரெட்டி |
குறள் எண் :940
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
பொருள்:
இரண்டொழுக்க பண்புகள் :
*இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.
*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.
பொன்மொழி :
கல்வியும் நன்னடத்தையுமே ஒரு மனிதனை நல்லவனாக்குகின்றன---அரிஸ்டாட்டில்
பொது அறிவு :
1. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகலிடம் பெற்ற இடம் எது?
விடை: பத்தமடை.
2. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் எது?
விடை: கன்னியாகுமரி.
English words & meanings :
டிசம்பர் 21
2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
நீதிக்கதை
பேராசை
முன்னொரு காலத்தில் ராமு, சோமு என்ற தொழிலதிபர்கள் இருந்தனர். அவர்கள் ஒன்றாக பயணம் செய்தனர். அவர்கள் போகும் வழியில் சோமு கீழே ஒரு பை கிடப்பதை பார்த்தார். அந்த பையை திறந்து பார்த்தால் பை முழுக்க தங்கக் காசுகள் இருந்தன.
“ஆஹா! நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி! எனக்கு இவ்வளவு தங்க காசுகள் கிடைத்திருக்கு!”
என்று ரொம்ப பெருமையாக ராமுவிடம் சோமு சொன்னார். அப்போது ராமு சொன்னார் “நீ மட்டும் அதிர்ஷ்டசாலி என்று சொல்லாதே, நாம் இரண்டு பேரும் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்" என்றார்.
“அது எப்படி முடியும் நான் தான் இந்த பையை முதலில் பார்த்தேன். அதனால் எல்லா தங்கமும் எனக்குத் தான். அப்புறம் அதிர்ஷ்டமும் எனக்குத் தான். உனக்கு இல்லை” என்று கூறினார் சோமு.
சோமு சொன்னதைக் கேட்ட ராமு எதுவும் பேசவில்லை. தேவை இல்லாமல் சண்டை போடக்கூடாது என்று நினைத்தார் ராமு. அந்த சமயத்தில் யாரோ பின்னாடி இருந்து திருடன், திருடன் என்று கத்தினார்கள். அப்போது அவர்கள் திரும்பி பார்க்கும் போது, கையில் கம்போடு சிலர் தங்களை நோக்கி ஓடிவருவதை பார்க்கிறார்கள்.
அப்போது சோமு சொன்னார் “ஐயோ! கடவுளே! இப்போது நம்மை இவர்கள் தங்கத்தோடு பார்த்தால் நாம் மாட்டிக்கொள்வோம், ரொம்ப அடிப்பார்கள் ” என்று கவலையோடு சொன்னார்.
அதுற்கு ராமு சொன்னார் “நாம் இல்லை. நீதான் மாட்டுவாய், உன்னை தான் பயங்கரமா அடிப்பாங்க. நீ சொன்னபடி, அந்த தங்கம் உனக்கு மட்டும் தான் சொந்தம் என்றாய் அல்லவா, இப்போ அவங்க தர போகும் அடியும் உனக்கு மட்டுமே சொந்தம்” என்றார்.
நாம் நமது அதிர்ஷ்டத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் நமது கெட்ட நேரத்தில் அவர்கள் நம்முடன் இருப்பார்கள் என்று யோசிப்பது முட்டாள்தனம்.
இன்றைய செய்திகள்




No comments:
Post a Comment