Breaking

Tuesday, February 18, 2025

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பில்லையா ? - அண்ணாமலை கருத்துக்கு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்


"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பில்லை என்ற கருத்தைப் பரப்ப முயல்வது தவறு"

அண்ணாமலை கருத்துக்கு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்...

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில் குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி கற்பதாக அண்ணாமலை கூறியதற்கு தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு

தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் : 58,000

தனியார் பள்ளிகள் சுமார் : 12,690

CBSE பள்ளிகள் வெறும் : 1,835

CBSE பள்ளிகள் தவிரக் கட்டாய இந்தி பாடம் எங்கும் இல்லை ;

தமிழ்நாட்டில் வெறும் 3.16 % பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாயமாக உள்ளது மனம் போன போக்கில் ஒரு தப்புக் கணக்கை உருவாக்கி , அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பில்லை என்ற கருத்தைப் பரப்ப முயல்வது தவறு - தகவல் சரிபார்ப்பகம்

No comments:

Post a Comment