
தமிழக அரசு துறைகளில் பணியாற்றி வரும் 8,144 ஊழியர்கள் இன்று ஓய்வு பெறுகின்றனர்.
குரூப் ஏ பணியிடங்களில் 424 , பி பணியிடங்களில் 4,399 , சி பிரிவில் 2,185 மற்றும் டி பணியிடங்களில் 1,136 பேர் ஓய்வு பெறுகின்றனர்.
தலைமை செயலகத்தில் மட்டும் 30 பேர் ஓய்வு பெறுகிறார்கள். இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிகமாகும். இது மொத்த அரசு ஊழியர்களில் 0.86 % ஆகும் .