
The more you give, the more you gain.
நீங்கள் அதிகம் கொடுத்தால், அதிகம் பெறுவீர்கள்.
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
தன்னை உயர்ந்தவனாகவும் மற்றொரு மனிதனை தாழ்ந்தவனாகவும் கருதுபவன் மனநோயாளி - அண்ணல் அம்பேத்கர்
பொது அறிவு :
English words :
Take down –remove something, write down the spoken words, ஒரு பொருளை அகற்றுதல், சொல்லுவதை எழுதுதல்
Grammar Tips:
அறிவியல் களஞ்சியம் :
பூமியை விட்டு விலகும் நிலவு
ஆண்டுக்கு 3.8 செ.மீ., என்ற அளவில் நிலவு, பூமியை விட்டு விலகி செல்கிறது. இதனால் பூமி சுற்றும் வேகமும் குறைகிறது. இதனால் ஒரு நாளுக்கான நேரம் 25 மணியாக அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆண்டுதோறும் நிலவு நகர்வதால் 7 கோடி ஆண்டுக்கு முன் ஒரு நாளுக்கு 23.5 மணி நேரமாக இருந்தது. ஆனால் இதுகுறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. ஆண்டுக்கு 3.8 செ.மீ., என்பது பூமி - நிலவு இடையிலான 3.84 லட்சம் கி.மீ., துாரத்தில் வெறும் 0.00000001 சதவீதம் தான். எனவே இது நடக்க லட்சக்கணக்கான ஆண்டுகளாகும் என தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 24
நீதிக்கதை
புள்ளிமான்கள்
எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றன புள்ளிமான்கள்.
சரி, உங்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டது சூரியன். நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்! என்றது புள்ளிமான்கள். சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது.
சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. சூரியன் ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டது. ஒரு புள்ளி மான் சொன்னது, நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்றது. இன்னொரு புள்ளிமானும், நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்று சொன்னது.
இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும்.
நீதி :
இன்றைய செய்திகள்



No comments:
Post a Comment