JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, September 26, 2025

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் இன்று இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்நிலையில், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (26.09.2025 -வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment