ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள்:
10ஆம் வகுப்புத் தேர்வு: மார்ச் 3ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு மார்ச் 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்புத் தேர்வு: மார்ச் 3ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஏப்ரல் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
எந்தெந்தத் தேர்வுகள் ஒத்திவைப்பு?
10ஆம் வகுப்பில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளில் திபெத்தியம், ஜெர்மன், தேசிய மாணவர் படை (NCC), போடி, போடோ, டாங்க்கல், ஜப்பானீஸ், பூடியா, ஸ்பானிஷ், காஷ்மீரி, மிசோ, பஹாசா மலே, எலிமென்ட்ஸ் ஆஃப் பிசினஸ், மற்றும் எலிமென்ட்ஸ் ஆஃப் புக் கீப்பிங் மற்றும் அக்கவுண்டன்சி ஆகிய பாடங்கள் அடங்கும்.
12ஆம் வகுப்பில் மார்ச் 3ஆம் தேதி சட்டப் படிப்பு (Legal Studies) தேர்வு நடைபெறவிருந்தது. இது தற்போது ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிற தேதிகளில் மாற்றம் இல்லை
இந்தத் தேர்வுகள் தவிர, மற்ற அனைத்து தேர்வு தேதிகளிலும் எந்த மாற்றமும் இல்லை என்று சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் தகவலை மாணவர்களும் பெற்றோர்களும் கவனத்தில் கொள்ளுமாறு பள்ளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
10ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் மார்ச் 18 வரை நடைபெறும்.
12ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை (முன்பு ஏப்ரல் 4 வரை இருந்தது) நடைபெறும்.
அனைத்துத் தேர்வுகளும் காலை 10:30 மணிக்கு ஒரே ஷிஃப்டில் தொடங்கும். இந்த ஆண்டு சுமார் 45 லட்சம் மாணவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 204 பாடங்களுக்கான தேர்வுகளை எழுத உள்ளனர்.
இரண்டு கட்டத் தேர்வு முறை
இந்த ஆண்டு 10ஆம் வகுப்புத் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன:
முதல் கட்டத் தேர்வு: பிப்ரவரி 17 முதல் மார்ச் 6, 2026 வரை நடைபெறும். (இது கட்டாயம்)
இரண்டாம் கட்டத் தேர்வு: மே 15 முதல் ஜூன் 1 வரை நடைபெறும். (இது விருப்பத்தேர்வு, மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும்)
இரண்டு கட்டத் தேர்வுகளிலும் அதிகபட்ச மதிப்பெண் எதுவோ, அதுவே இறுதி மதிப்பெண் பட்டியலில் சேர்க்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.



No comments:
Post a Comment