பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கக்கூடிய சூழலில் தமிழ்நாடு அரசு இந்த முறை பொங்கல் பரிசாக என்னென்ன வழங்க போகிறது என்ற ஒரு எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்திருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பு தொகுப்பை ஜனவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் என்பது தெரிவிக்கப்படும் நிலையில், தற்போது பொங்கல் பரிசுத்து தொகுப்பிற்கான டோக்கன் வினியோகத்தை பொறுத்த வரையில் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுருப்பதாக தகவல் என்பது வெளியாகி இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டோக்கன் விநியோகம் குறித்த விவரங்கள்
பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்கான டோக்கன்கள் ஜனவரி முதல் வாரத்தில் (தோராயமாக ஜனவரி 3 முதல் 8-ம் தேதி வரை) விநியோகிக்கப்பட உள்ளன. ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக குடும்ப அட்டைதாரர்களின் வீடு வீடாகச் சென்று இந்த டோக்கன்களை வழங்குவார்கள். அந்த டோக்கனில், நீங்கள் எந்த நாள் மற்றும் எந்த நேரத்தில் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்த முறை பொங்கல் பரிசு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரருக்கும் ₹3,000 ரொக்கப் பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (முன்னதாக ₹5,000 வழங்கப்படலாம் என்ற கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் இருந்தன). அதனுடன் வழக்கமாக வழங்கப்படும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன், கூடுதல் பொருட்களும் (முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவை) இடம்பெற வாய்ப்புள்ளது.
இலவ வேட்டி சேலை
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தமிழக அரசின் விலையில்லா வேட்டி-சேலைகளும் வழங்கப்படும். இலவச வேட்டி சேலை என்பது, தமிழ்நாடு அரசின் பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது ஏழை, எளிய குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவசப் பரிசுத் திட்டமாகும். குறிப்பாக சொல்லபோனால் ஏழைகளுக்கு உதவுதல், கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், தமிழ்நாட்டின் பாரம்பரிய நெசவுத் தொழிலை மேம்படுத்துதல் காரணங்களுக்காக இலவச வேட்டி விநியோகம் செய்யப்டுகிறத.
பொங்கல் பரிசு எப்பொழுது?
தமிழகத்தில் உள்ள சுமார் 2.25 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்கள் இந்தப் பலன்களைப் பெறுவார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் ரொக்கப் பணம் குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிசுத் தொகுப்பு விநியோகத்தை ஜனவரி 10-ம் தேதிக்குள் பெரும்பாலான குடும்பங்களுக்குச் சென்றடையச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.



No comments:
Post a Comment