JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, April 27, 2026

NEET தேர்வர்கள் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிக்க வேண்டியது அவசியம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

இந்த ஆண்டு நீட்-யுஜி (NEET UG) தேர்வு 5,432 மையங்களில் நடைபெற உள்ளது. 

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) எழுதும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் பயோமெட்ரிக் (Aadhaar biometric) விவரங்களைப் புதுப்பித்து வைத்திருக்குமாறு தேசிய தேர்வு முகமை (NTA), அறிவுறுத்தியுள்ளது. தேர்வு நடைபெறும் நாளில், தேர்வு மையங்களில் எவ்வித தடையுமின்றி பயோமெட்ரிக் சரிபார்ப்பை மேற்கொள்வதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

தேர்வு மையத்தில் சுமூகமான பயோமெட்ரிக் சரிபார்ப்பிற்கு இது அவசியமானது" என்று குறிப்பிட்டுள்ள தேர்வு வாரியம் "தேவைப்பட்டால், தேர்வர்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஆதார் சேவா மையத்திற்குச் சென்று முன்கூட்டியே தங்களது விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்" என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், யு.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) வழிகாட்டுதல்களின்படி, ஒரு குழந்தைக்கு 15 வயது பூர்த்தியாகும்போது ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும். 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்தப் புதுப்பித்தல் செயல்முறை முற்றிலும் இலவசமாகும். தேர்வர்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஆதார் பதிவு மையங்களை uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கண்டறியலாம்.

No comments:

Post a Comment