அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை
குறள் எண்:469
குறள்:
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
பொருள்:
அவரவரது இயல்புகளைத் தெரிந்து கொண்டு, அவரவர்க்குத் தகுந்தபடி செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் கூடக் குற்றம் உண்டாகிவிடும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .
2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.
பொன்மொழி :
ஒவ்வொரு மழைத்துளியும் நாளைய வாழ்வின் விதை.
Thought for the Day :
Rain teaches us that even the darkest clouds bring life.
பொது அறிவு :
1. காந்திஜி அவர்களை" மகாத்மா" என்றழைத்தவர் யார்?
இரபீந்திரநாத் தாகூர்.
2. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களை "இரும்பு மனிதர் " என்றழைத்தவர் யார்?
மகாத்மா காந்தி.
English words :
Confident – Believes in oneself, தன்னம்பிக்கையுள்ளவர்.
Optimistic – Always sees the positive, நம்பிக்கையுள்ளவர்
புவியியலும் சுற்றுசூழலும் :
NMMS :
MAT
ஒரு சங்கேத மொழியில் "WHO" என்பதை "16" எனவும், "HOW" என்பதை "0" எனவும் குறிக்கப்பட்டால் "WHY" என்பதன் குறியீடு________________________
(1) 70.
(2) 5.
(3) 6.
(4) 56.
விடை: (3) 6
நீதிக்கதை
🌳 உதவும் கரங்கள்
ஒரு பெரிய காட்டில் பல விலங்குகள் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. அந்தக் காட்டில் ஒரு சிறிய அணிலும் வாழ்ந்து வந்தது. அது மிகவும் சுறுசுறுப்பானதும், அன்பானதுமாக இருந்தது. யாருக்காவது உதவி தேவைப்பட்டால், தன்னால் முடிந்த அளவு உதவி செய்வது அதன் வழக்கம்.
ஒருநாள் அணில் உணவு தேடி காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒரு சிறிய முயல் ஒரு பள்ளத்தில் தவறி விழுந்திருப்பதைப் பார்த்தது. முயல் மேலே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது.
அணில் உடனே அருகில் கிடந்த ஒரு நீண்ட கொடியை எடுத்துக்கொண்டு பள்ளத்திற்குள் இறக்கியது. முயல் அந்தக் கொடியைப் பிடித்துக் கொண்டது. பின்னர் அணில் அருகில் இருந்த மானையும் குருவியையும் அழைத்து வந்தது. அனைவரும் சேர்ந்து கொடியை இழுத்து முயலைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.
முயல் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. தன்னுடைய சிறிய உதவிக்காக அணிலுக்கு நன்றி கூறியது.
சில நாட்களுக்குப் பிறகு அணில் ஒரு மரக்கிளையில் இருந்து கீழே விழுந்து அதன் காலில் காயம் ஏற்பட்டது. அப்போது அதற்கு உதவியது அந்த முயல்தான். முயல் மற்ற விலங்குகளை அழைத்து வந்து அணிலுக்கு தேவையான உதவிகளைச் செய்தது.
அப்போது அணில், தான் பிறருக்கு செய்த உதவி தன்னிடமே திரும்பி வந்ததை நினைத்து மகிழ்ந்தது. அந்த நாளிலிருந்து காட்டில் வாழ்ந்த அனைத்து விலங்குகளும் ஒருவருக்கொருவர் உதவி செய்து அன்புடன் வாழத் தொடங்கின.
🌟 நீதி:
“மற்றவர்களுக்கு உதவி செய்யும் நல்ல மனம், ஒருநாள் நமக்கும் உதவியாகத் திரும்பி வரும்.”
இன்றைய செய்திகள்










No comments:
Post a Comment