
தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - 2014-17 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தினால் தேர்வு செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021, தீர்ப்பாணை நாள்.29.04.2024) மறு வரையறை செய்யப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலராக நேரடி தெரிவுப்பட்டியலின்படி நியமனம் செய்யப்பட்டவர்கள் பயிற்சி முடித்து முறையான மாவட்டக்கல்வி அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் சார்பு.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2014-17 ஆம் ஆண்டிற்கு மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் தெரிவுப் பட்டியல் சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021. தீர்ப்பாணை நாள்.29.04.2024) மறுவரையறை செய்யப்பட்ட தெரிவுப்பட்டியலை ஏற்பளிப்பு செய்தும், அப்பட்டியலின்படி (1) திரு.S.நிர்மல்குமார். (2)திரு Z.சூசைமரியநாதன், (3) திருமதி.S.இளையராணி, ஆகிய "03" அலுவலர்களை 06 மாதகால நிருவாக பயிற்சிக்கு மாற்றுப்பணியில் நியமனம் செய்தும். நிருவாக பயிற்சியினை மேற்கொள்ளயேதுவாக 03 மிகைப்பணியிடங்களை தோற்றுவித்தும், பார்வை-2 இல் காணும் அரசாணையின்படி அரசளவில் ஆணைகள் வழங்கப்பட்டது.
2. இதன்தொடர்ச்சியாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது நிருவாக பயிற்சியினை நிறைவுசெய்ததையடுத்து, அன்னார் மாவட்டக்கல்வி அலுவலராக பயிற்சியில் சேர்ந்த நாள் முதல், தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி சிறப்பு விதிகளில் வகுப்பு IV கீழ் வரும் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்தில் முறையான நியமனம் வழங்கியும். அவரவர் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிலமர்த்தியும் இதன் வழி ஆணையிடப்படுகிறது.
DEO-DR- Regular Appointment.pdf
👇👇👇👇
No comments:
Post a Comment