Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 29, 2024

Friday, March 29, 2024

இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு. இன்னும் 2 நாளில் இதைச் செய்யலைன்னா சிலிண்டர் மானியம் கட்

எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் அனைவருக்கும் இது மிகவும் கட்டாயம். எல்பிஜி கேஸ் சிலிண்டரின் இந்த புதிய விதியை நீங்கள் அனைவரும் பின்பற்றவில்லை என்றால், உங்களுக்கு கிடைக்கும் எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படும்.

எல்பிஜி கேஸ் சிலிண்டரின் கேஒய்சியை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் செய்து நிரப்பி முடிக்கவும், இல்லையெனில் மானியத்தின் பலன்களுக்கு தகுதி பெற மாட்டீர்கள். அனைத்து எல்பிஜி சிலிண்டர் வைத்திருப்பவர்களும் தங்களது KYC ஐப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

E-KYC செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க... முதலில் உங்களுக்கு சிலிண்டர் வழங்கும் கேஸ் ஏஜென்சிக்கு சென்று உங்கள் கணக்கின் KYC ஐப் புதுப்பிப்பதற்கு அவர்கள் கேட்கும் ஆவணங்களை தாங்க. இப்படி படிவத்தை நிரப்பி தருபவர்களுக்கு மட்டுமே இனி மான்யம் வழங்கப்படும். 

எல்பிஜி கேஸ் சிலிண்டரின் கேஒய்சியை மார்ச் 31ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். மறந்துடாதீங்க.
Friday, March 29, 2024

ரம்ஜான் பண்டிகை: தமிழகத்தில் 4 முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வு அட்டவணை மாற்றம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்.10 மற்றும் ஏப்.12-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்.4 மற்றும் ஏப்.6-ம் தேதிகளுக்கு மாற்றப்பவடுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும் என்று வருடாந்திர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப். 19-ம் தேதிநடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

புதிய தேர்வுக் கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருந்தது. அதன்படி 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்.10 மற்றும் ஏப்.12-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்.4 மற்றும் ஏப்.6-ம் தேதிகளுக்கு மாற்றப்பவடுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
Friday, March 29, 2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான (29.03.2024) இன்றைய பலன்கள்


மே
ஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

சிந்தனையில் கவனம் வேண்டும். எதிலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. பொருளாதாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். சிலருக்கு குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும்.

ரிஷபம்

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய நபர்களிடத்தில் கனிவுடன் பழகவும். சுபகாரியங்களில் கலந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும்.

மிதுனம்

பொருளாதார நெருக்கடிகள் குறைய வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த செய்திகள் வந்துசேரும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகலாம்.

கடகம்

தற்பெருமையான விஷயங்களை பேசுவதை குறைத்துக் கொள்ளவது நல்லது. வித்தியாசமான எண்ணங்களும், முயற்சிகளும் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். அலுவலகத்தில் பொறுமையை கையாளவும். பொறுமை வேண்டிய நாள்.

சிம்மம்

மறைமுக தடைகளை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். தாயுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்னைகள் குறையும். புதிய வேலைக்கான வாய்ப்பு ஏற்படும். புதிய மின்னணு சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.

கன்னி

புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தனவரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

துலாம்

பணிவான பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகப் பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை புரிந்து கொள்வீர்கள். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்கள் பிறக்கும். அமைதி நிறைந்த நாள்.

விருச்சிகம்

சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்களிடம் அதிக உரிமை கொள்வதை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவது நல்லது. கனிவான பேச்சுக்களால் பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். வேண்டும்.

மகரம்

எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். கடன் தொடர்பான பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கும்பம்

உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் கட்டுபாட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகளை புரிந்து கொள்வீர்கள். மனதில் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். மனைவியுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள்.

மீனம்

விவேகமான செயல்பாடுகளின் மூலம் நன்மதிப்பு ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வீர்கள். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரம் சார்ந்த ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

Friday, March 29, 2024

கண் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் பழங்கால சிகிச்சை முறைகள் மற்றும் வீட்டு வைத்தியம்!

நவீன யுகத்தில், திரை மற்றும் கேஜெட்டுகள் நம் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகிவிட்டன.

அதிகப்படியான திரை நேரம் கண்களுக்கு சுமை ஆகின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுத்திகள், ஒவ்வாமை, சூரியனால் ஏற்படும் பாதிப்பு, நீரிழிவினால் உண்டாகும் ரெட்டினோபதி ஆகியவை நம் கண் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணங்களில் அடங்கும்.

ஆரம்பகால பார்வை இழப்பைத் தடுக்கவும், டிஜிட்டல் திரிபிலிருந்து விடுபடவும், வறண்ட, சிவப்பு மற்றும் நீர் நிறைந்த கண்கள் போன்ற நிலைமைகளைத் தவிர்க்கவும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய தினசரி வழக்கத்தைப் பின்பற்றுவது முக்கியம்.

ஆயுர்வேதத்தின் படி, மோசமான வாழ்க்கை முறை நம் கண் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவு மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக, வறண்ட கண்கள், கண் எரிச்சல் போன்ற கண் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

பண்டைய மருத்துவ நடைமுறையில் பல இயற்கை வைத்தியம் மற்றும் சிகிச்சைகள் உள்ளன. அவை கண்பார்வையை மேம்படுத்த உதவும்.

"கண்பார்வையை மேம்படுத்துவதற்கான ஆயுர்வேத வைத்தியத்தின் பண்டைய நடைமுறை முக்கியமாக பண்டைய மூலிகைகள் மற்றும் நேத்ரா கிரியா கல்பாஸ் மற்றும் பஞ்சகர்மா போன்ற சிகிச்சைகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. நல்ல பார்வையை பராமரிக்கவும் மேம்படுத்தவும், பல தினசரி நடைமுறைகள் மற்றும் ஏராளமான ஆயுர்வேத மூலிகைகள் நம் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன "என்று ஏவிபி ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆராய்ச்சி அதிகாரி மற்றும் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பிரேம்சங்கர் கூறுகிறார்.

ஆயுர்வேத கண் ஆரோக்கிய ரகசியங்கள்:

கண்கள் மிக முக்கியமான புலனுறுப்பாக கருதப்படுகிறது. காலப்போக்கில், வயது, வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் மரபணு காரணிகள் உள்ளிட்டப் பல்வேறு தாக்கங்களால் நமது பார்வை பலவீனமடையக்கூடும்.

உங்கள் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய சிகிச்சைகள் மற்றும் பண்டைய மூலிகைகளின் பட்டியலை டாக்டர் பிரேம்சங்கர் பகிர்ந்து கொள்கிறார்.

1. திரிபலா: மூன்று பழங்களின் கலவையானது திரிபலா என்று அழைக்கப்படுகிறது. இது பார்வையை மேம்படுத்தும் திறனுக்காக அறியப்பட்ட ஒரு பண்டைய தீர்வாகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை கண் திசுக்களின் புத்துணர்ச்சியை ஊக்குவிக்கின்றன. திரிபலாவை வாய்வழியாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது கண் கழுவும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

2. சரிவிகித உணவு: வைட்டமின்கள் ஏ, ஈ, சி மற்றும் பி ஆகியவற்றை உள்ளடக்கிய புரதங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சீரான உணவு சிறந்த பார்வையை பராமரிக்க உதவுகிறது. நெய், தேன், பார்லி, கோதுமை, பழைய அரிசி ஆகியவற்றை நம் உணவில் சேர்ப்பது நல்ல கண் ஆரோக்கியத்தைத் தக்கவைக்க உதவும்.

3. அஞ்சனா மற்றும் நஸ்யா: கண்கள் பெரும்பாலும் நோய்க்கு அதிகம் பாதிக்கப்படுகின்றன. அஞ்சனாவை (கோலிரியம்) பயன்படுத்துவது மற்றும் நாஸ்யத்தை (மூக்கு வழியாக மருந்துகளின் ஊடுருவல்) தவறாமல் பயன்படுத்துவது கண்களைப் பாதுகாக்கவும்; அதிகப்படியான கபாவை அகற்றவும் பரிந்துரைக்கப்படுகிறது.

4. பாத மசாஜ்: பாத பாதுகாப்பைப்பயன்படுத்துதல் மற்றும் பாத மசாஜ் (எண்ணெயுடன் பாத மசாஜ்) செய்வது பார்வையைப் பாதுகாக்க பரிந்துரைக்கப்படுகிறது.

5. த்ராடகம்: எரியும் நெய் தீபத்தைப் பார்ப்பது 'த்ராடகம்' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு ஆயுர்வேத கண் உடற்பயிற்சி. உங்கள் நாளின் பத்து நிமிடங்களை ஒரு இருண்ட அறையில் உட்கார்ந்து நெய் விளக்கை வைத்து சுடர் ஏற்றி 30 டிகிரி கோணத்தில் தெரியும் ஒளியினை சீராக உற்றுப் பாருங்கள். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் பார்வை மற்றும் கண் வலிமையை மேம்படுத்தலாம்.

6. கிரியா கல்பா: மருந்து நெய் மற்றும் பிற சூத்திரங்களை உள்ளடக்கிய ஆயுர்வேத கண் சிகிச்சைகள் கிரியா கல்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தர்ப்பணம், புடபகா, சேகா, அஞ்சனா, அஸ்கியோட்டானா, பிண்டி மற்றும் பிடலகா போன்ற பல்வேறு கிரியா கல்ப சிகிச்சைகள் கண் ஆரோக்கியத்திற்கு சிகிச்சையளிப்பதிலும் பாதுகாப்பதிலும் திறன்மிக்கவை.
Friday, March 29, 2024

தமிழகத்தில் தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம்.!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 10 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்ரல் 4 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, March 29, 2024

செம்பருத்தி டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல புதிய உணவு முறைகளை ட்ரை செய்து வருகின்றனர்.

குறிப்பாக தாங்கள் உட்கொள்ளும் உணவிலும் மிகவும் கவனமாக இருந்து ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை மட்டுமே சாப்பிட தொடங்கியுள்ளனர். அதில் தினசரி குடிக்கும் டீக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.காலம் காலமாக பால் டீ மட்டுமே குடித்து வந்த மக்கள் கடந்த சில காலங்களாக பிளாக் டீ, கிரீன் டீ, ப்ளூ டீ போன்ற புதிய ஆரோக்கியமான டீ வகைகளை குடிக்க துவங்கிவிட்டனர். அந்த வரிசையில் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் இன்னொரு வகையான ஆரோக்கியமான தேநீர் இந்த செம்பருத்தி டீ.

இந்த செம்பருத்தி தேநீர் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்க உதவுவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த செம்பருத்தி டீயின் சுவை நெல்லிக்காய் சுவை போல இருக்கும். பொதுவாக இந்த செம்பருத்தி தேனீரில் சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடித்து வரலாம். இந்த நிலையில் செம்பருத்தி டீயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ரத்த அழுத்தம் குறையும்:

நம்மில் பலருக்கும் மன அழுத்தம் பிரச்சனைகள் காரணமாக பல நேரங்களில் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. இதனால் நம் உடலின் உறுப்புகள் பாதிப்படைய செய்கிறது. இந்த செம்பருத்தி டீயை குடித்து வந்தால் நம் இதய ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்படுகிறது. இதனால் உங்கள் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க உதவும். மேலும் உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் உள்ளவர்கள் கூட இந்த செம்பருத்தி டீயை தினசரி குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும். தினசரி காலை உணவிற்கு முன்பு ஒரு கிளாஸ் செம்பருத்தி டீ குடித்து வந்தால் உடலுக்கு நல்லது.

கொலஸ்ட்ரால் குறையும்:


நம் உடலில் ஒரு குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் எப்போதும் தேவைப்படுகிறது. ஆனால் இந்த கொலஸ்ட்ரால் நல்ல கொலஸ்ட்ரால் ஆக மட்டுமே இருக்க வேண்டும். ஒரு சிலர் உடல் பருமனாக இருக்கும் போது நிச்சயமாக இவர்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தான் அதிகம் இருக்கும். இதனால் தான் இன்றைய காலகட்டத்தில் பலரும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளால் அவதிப்படுவது உண்டு. ஒழுங்கற்ற உணவு முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் போன்றவற்றால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்கி விடுகிறது. இந்த செம்பருத்தி டீ யில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. ஆரோக்கியமான சுறுசுறுப்பான உடலுக்கு தினசரி செம்பருத்தி டீ குடித்து வந்தால் நல்லது.

ரத்த அணுக்கள் சீராகும்:

நம் உடலில் பல ரத்த அணுக்கள் அழிவதும் பின்பு தானாகவே உற்பத்தி ஆவதும் இயற்கையான செயல் ஆகும். ஆனால் ஒரு சில ரத்த அணுக்கள் சரியான முறையில் சுத்தம் செய்யப்படாமல் நம் உடலுக்கு சேதங்களை உண்டாக்குகின்றது. இதில் உள்ள நச்சுக்களால் உங்கள் முகம் கருமையாக மாறிவிடும். இவற்றை போக்குவதற்கு நாம் அடிக்கடி முகத்திற்கு ஸ்கிரப் செய்து வரவேண்டும். செம்பருத்தி டீயை கொண்டு உங்கள் முகத்திற்கு ஸ்கிரப் செய்வதால் ரத்த அணுக்கள் விரைவாக தூய்மையாக மாறும். அதே போல தினசரி உணவில் செம்பருத்தி டீயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கூட நம் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.

மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு:

பெண்கள் பலருக்கும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, உடல் தொந்தரவுகள், சரியான இடைவெளியில் மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு இந்த செம்பருத்தி டீ ஒரு சிறந்த மருந்தாகும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தினசரி செம்பருத்தி டீயை குடித்து வரலாம். மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அடி வயிற்று வலி போன்றவற்றை உடனடியாக குணப்படுத்த செம்பருத்தி பெரிதும் உதவுகிறது. அதே போல பெண்கள் கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீயை குடித்து வந்தால் ஹார்மோன்கள் சமமாகவும் சீராகவும் இருக்க உதவி செய்யும். இதனால் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Thursday, March 28, 2024

Thursday, March 28, 2024

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: ஏப்.3-ஆம் வாரத்தில் தொடக்கம்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான பணிகள், ஏப்.3ம் வாரத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்துக்கும் மேல் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதேபோல 8,500-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இங்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்தோரின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

அது என்ன கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்?

மத்திய அரசின் இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ சட்டம்- RTE) சிறுபான்மையினர் பள்ளிகள் அல்லாத, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். நர்சரி, பிரைமரி, மெட்ரிக் தனியார் பள்ளிகளோடு, ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இந்த மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசே வழங்கி வருகிறது.

2011 முதல்கட்டாயக்கல்விஉரிமைச்சட்டம்

இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. நாடு முழுவதும் 2010-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது. 2013 முதல் இந்த திட்டம் தமிழகத்தில் அமலில் உள்ளது.

1.10 லட்சம் இடங்கள்

இதன்கீழ் இதுவரை 4.60 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற்று படித்து வருகின்றனர். இந்த சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சுமார் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேர்பவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணமின்றி தனியார் பள்ளிகளில் இலவசமாகப் லாம்.

இந்த நிலையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

சட்டப்படி சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் பள்ளி கல்வித்துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்தப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால் பெற்றோருக்கு ஒப்புகைச் சீட்டைத் தவறாது வழங்க வேண்டும்.

விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம். இதுதவிர, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: https://tnschools.gov.in/rte/
Thursday, March 28, 2024

இனி கலை அறிவியல் கல்லூரிகளில் இனி நேரடி சேர்க்கை கிடையாது!!

நடப்பு கல்வியாண்டு முதல் இனி கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒற்றை சாளர சேர்க்கை முறை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இந்த ஒற்றைசாளரை முறை அதாவது கவுன்சிலிங் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.

இந்த ஒற்றைசாளர முறையால் மாணவர்கள் அனைவருக்கும் தரவரிசை முறைப்படி சேர்க்கை நடைபெறும்.அது மட்டுமின்றி இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்றவாறு பாடப் பிரிவினையானது ஒதுக்கப்படும்.இவ்வாறு செய்வதால் இதில் கலந்துக்கொள்ளும் மாணவருக்கு முதலில் படாப்பிரிவானது ஒதுக்கப்படமால் அடுத்த மாணவருக்கு ஒதுக்க இயலாது.

அந்த வகையில் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையானது தனியாக விண்ணப்பித்து வந்தனர்.ஆனால் இனி நடப்பு கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் அனைவருக்கும் இந்த ஒற்றை சாளர முறையில்(Single Window Admission System) சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில் கூறியுள்ளதாவது,

கல்லூரிக் கல்வி இயக்குநர் தலைமையில் 06.03.2024 அன்று கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற அரசு உதவிபெறும் கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில், அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பின்பற்றப்படும் ஒற்றை சாளர முறை (Single Window System), போன்று அரசு உதவிபெறும் கல்லூரிகளின், உதவிபெறும் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கும் ஒற்றைச் சாளர முறையிலான மாணக்கர் சேர்க்கையை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கல்லூரி முதல்வர்களின் ஆலோசனைக்குப் பின், அக்கூட்டத்தில், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ளஅரசு உதவிபெறும் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கையை ஒற்றை சாளர முறையில் (Single Window System) பின்பற்றுவது தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி முதல்வர்களை கொண்டு குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை பெற்று செயல்படலாம் என முடிவு செய்யப்பட்டது. அதற்கிணங்க மேற்காண் பொருள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க ஏதுவாக பின்வரும் கல்லூரி முதல்வர்களை கொண்டு குழு அமைக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
Thursday, March 28, 2024

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்; 13 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பு

12 ஆம் வகுப்பு கணித் தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடியால் மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 29 முதல் மார்ச் 22 வரை நடைபெற்றது. இதில் கணிதத் தாள் மார்ச் 19 ஆம் தேதி நடைபெற்றது. 12 ஆம் வகுப்பு கணிதத் தாள் எளிதாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் தெரிவித்தனர்.

இந்தநிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத் தேர்வில் 13 மதிப்பெண்கள் கிடைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கணித வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 13 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

வினாத்தாளில் கேள்வி எண் 17, கேள்வி எண் 25 மற்றும் கேள்வி 47 ஆகியவை தவறாக கேட்கப்பட்டிருந்ததாக கணித ஆசிரியர்கள் தேர்வுத் துறைக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்க முயன்ற மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர்.

இந்தநிலையில், அந்த கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
Thursday, March 28, 2024

வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்களை பாருங்க.. சர்க்கரை நோய்க்கு தீர்வு!


வெண்டைக்காய் என்றாலே பலருக்கு பிடிப்பதில்லை. இதில் அதிக விழுவிழுப்பு இருப்பதால் பலர் இதை சாப்பிட தயங்குவார்கள்.

ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளது என்பது உண்மை. அதேசமயம் தண்ணீர் அல்லது வெண்டைக்காய் தண்ணீர் எடுத்துக்கொள்வது நூற்றுக்கணக்கான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதன் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இது சூப்பர்ஃபுட்களின் வரிசையில் உள்ளது. உடற்தகுதியை பின்பற்றுபவர்கள் கூட வெண்டைக்காய் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர். ஊட்டச்சத்துக்களுடன் உணவுக்கு சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள். இதை எப்படி தயாரிப்பது மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

வெண்டைக்காயை சேர்த்து, தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை காலையில் குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது.

வெண்டைக்காய் பானத்தின் நன்மைகள்

ஊட்டச்சத்து:

வெண்டைக்காய் ஒரு குறைந்த கலோரி காய்கறி. இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கருவேப்பிலை நீரை குடிப்பதன் மூலம், பல வகையான சத்துக்கள் உடலுக்குக் கிடைக்கும்.

செரிமானத்தை மேம்படுத்துகிறது:

வெண்டைக்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்த இது சரியானது. இது மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது.

வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் குடல் ஆரோக்கியம் மேம்படும். இது குடல் இயக்கங்களை எளிதாக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது:

சில ஆரம்ப ஆய்வுகள் ஓக்ரா இரத்த சர்க்கரை அளவுகளில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளன. ஓக்ராவில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது செரிமான மண்டலத்தில் குளுக்கோஸின் உறிஞ்சுதலை மெதுவாக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

நீரேற்றம்: வெண்டைக்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இது தண்ணீருக்கு ஒரு நுட்பமான சுவையை அளிக்கிறது, மேலும் தண்ணீர் குடிக்க ஊக்குவிக்கிறது.

ஆக்ஸிஜனேற்ற பண்புகள்:

வெண்டைக்காய் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வெண்டைக்காய் நீர் பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு சாத்தியமான நன்மைகளை வழங்குகிறது.

ஹீமோ குளோபின் அளவை மேம்படுத்தும்

இதய ஆரோக்கியம்: இதய ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த வெண்டைக்காய் உதவுகிறது. கர்ப்பிணிகளின் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும், இரும்புச்சத்து பற்றாக்குறையை போக்கவும், ரத்த சோகை ஏற்படாமலும் இருக்க இந்த வெண்டைக்காய் உதவுகிறது.

வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால் வெண்டைக்காயில் ஆக்சலேட் அதிகமுள்ளதால், சிறுநீரகம், பித்தப்பை கற்களை வளர செய்ய கூடும். அதனால், அளவுக்கு அதிகமாக சாப்பிடவதும் நல்லதல்ல. மேலும் வெண்டைக்காயை அதிகமாக வதக்கினால் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்துவிடுமாம். எனவே, லேசாக வதக்கி இறக்கிவிட வேண்டுமாம்.

ஆனால் சிலருக்கு வெண்டைக்காய் ஒவ்வாமை இருக்கலாம். அந்த காரணத்திற்காக, தினமும் வெண்டைக்காய் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கும் முன் உரிய மருத்துவ நிபுணரை அணுகுவது நல்லது.
Thursday, March 28, 2024

அனைத்து அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB). இயக்குநர் அவர்களின் (DEE) செயல்முறைகள்... ..

அனைத்து அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB)...

மூன்று சுற்றுகளாக சார்ந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மூலமாக வழங்கப்பட உள்ளது...

DEO (DEE) -களுக்கு இயக்குநர் (DEE) செயல்முறைகள்...
👇👇👇👇👇
Thursday, March 28, 2024

2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து கொள்ள அனுமதி




2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்துதல் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ஈகைப் பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளின் தேதியை மாற்றி அமைக்கக் கோரி பார்வை ( 3 ல் கண்டுள்ளபடி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களால் அரசுக்கு கோரிக்கைகள் வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி , தேர்வு கால அட்டவணையில் பின்வருமாறு மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

பார்வை ( 1 ) யில் காணும் தேர்வு கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்ட 4 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளை 104.2024 மற்றும் 12.04.2024 ஆகிய தேதிகளுக்கு பதிலாக 04.04.2024 மற்றும் 06.04.2024 ஆகிய தேதிகளில் பள்ளி அளவிலேயே நடத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட உருது பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கிட சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்குமாறு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Thursday, March 28, 2024

100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு - தமிழ்நாட்டில் இனி ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு:

அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது நாள் ஒன்றிற்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில வாரியாக இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான, முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

மாநில வாரிய ஊதிய உயர்வு:


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, மத்திய, மாநில அரசுகள் வாக்காளர்களை கவரும் விதமாக எந்தவொரு நலத்திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது. அப்படி அறிவித்தார் அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்றமாகும். அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான், ஊதிய உயர்வானது கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதலே அமலுக்கு வந்துள்ளதாகா, மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, மாநில வாரியாக தற்போது பின்வரும் ஊதிய விவரங்கள் தான் பின்பற்றப்படுகிறது. மத்திய அரசின் இந்த ஊதியத்தை உயர்த்தும் நடவடிக்கை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வரிச எண் மாநில & யூனியன் பிரதேசங்கள் புதிய ஊதிய விவரம்
1 ஆந்திர பிரதேசம் ரூ.300
2 அருணாச்சல பிரதேசம் ரூ.234
3 அசாம் ரூ.249
4 பீகார் ரூ. 245
5 சத்தீஸ்கர் ரூ.243
6 கோவா ரூ.356
7 குஜராத் ரூ.280
8 ஹரியானா ரூ.374
9 இமாச்சல பிரதேசம் ரூ.236 - ரூ.295
10 ஜம்மு & காஷ்மீர் ரூ.259
11 லடாக் ரூ.259
12 ஜார்கண்ட் ரூ.245
13 கர்நாடகா ரூ.349
14 கேரளா ரூ.346
15 மத்திய பிரதேசம் ரூ.243
16 மகாராஷ்டிரா ரூ.297
17 மணிப்பூர் ரூ.272
18 மேகாலயா ரூ.254
19 மிசோரம் ரூ.266
20 நாகாலாந்து ரூ.234
21 ஒடிசா ரூ.254
22 பஞ்சாப் ரூ.322
23 ராஜஸ்தான் ரூ.266
24 சிக்கிம் ரூ.249
25 தமிழ்நாடு ரூ.319
26 தெலங்கானா ரூ.300
27 திரிபுரா ரூ.242
28 உத்தரபிரதேசம் ரூ.237
29 உத்தராகண்ட் ரூ.237
30 மேற்குவங்கம் ரூ.250
31 அந்தமான் & நிகோபர் ரூ.329 - ரூ.347
32 டையூ & டாமன் ரூ.324
33 லட்சத்தீவு ரூ.315
34 புதுச்சேரி ரூ.319
Thursday, March 28, 2024

TANCET 2024 தேர்வு முடிவுகள் வெளியானது..மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? - முழு விபரம் இதோ..!

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கும். அதேபோல் இன்ஜினியரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் 'டான் செட்' தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET 2024) முடிவை அண்ணா பல்கலைக்கழகம் இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tancet.annauniv.edu என்ற பக்கத்தில் டான்செட் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எம்பிஏ மற்றும் எம்சிஏ தேர்வர்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தங்கள் மதிப்பெண்களைச் தெரிந்துகொள்ளலாம்.

பல்கலைக்கழகம் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் சேர்க்கை (CEETA PG) முடிவையும் அறிவித்துள்ளது.

நேரடி இணைப்பு: https://tancet.annauniv.edu/tancet/index.html

TANCET 2024 முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

தேர்வு தேதி: மார்ச் 9

முடிவு தேதி: மார்ச் 28

இணையதளம்: tancet.annauniv.edu

உள்நுழைவு விவரங்கள்: மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்

டான்செட் மற்றும் சிஇஇடிஏ பிஜி தேர்வுகளின் மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 3 முதல் மே 3 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, டான்செட் தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடைபெற்றது. முதல் ஷிப்டில் எம்சிஏ (MCA) தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்தப்பட்டது. இரண்டாவது ஷிப்டில், மதியம், 2:30 முதல், 4:30 மணி வரை எம்பிஏ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. எம்சிஏ தேர்வுக்கு 9,206 பேரும், எம்பிஏ தேர்வுக்கு 24,814 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.

முதுகலை பொறியியல், கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் (ME/MTech/MArch/MPlan) படிப்புகளுக்கான CEETA முதுநிலை தேர்வு மார்ச் 10 அன்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 5,281 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

பல மாணவர்கள் சிறிய திருத்தங்களுக்காக (பெயரில் இனிஷியல், பெயரில் எழுத்துப்பிழை, பிறந்த தேதி, பாலினம், சமூகம், இருப்பிடம் போன்றவை) அணுகுவதாகவும், tanceeta@gmail.com சரியான ஆதாரங்களை சமர்ப்பிப்பதன் மூலம் சுயவிவர தரவை மாற்ற / மாற்ற இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

TANCET/CREETA PG 2024 முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?

நுழைவுத் தேர்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தைத் திறக்கவும்: tancet.annauniv.edu. TANCET/CEETA PG 2024 முடிவு பக்கத்திற்குச் செல்லவும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

உள்நுழைந்து உங்கள் மதிப்பெண்களை சரிபார்க்கவும்.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் இதர முதுநிலை படிப்புகளுக்கும் டான்செட் மற்றும் சீட்டா பி.ஜி., மூலம் பொது கலந்தாய்வு நடத்தப்படும். விரிவான அட்டவணை மற்றும் கலந்தாய்வு செயல்முறை விரைவில் பகிரப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
Thursday, March 28, 2024

CL LEAVE RULES - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற்கான விதிகள் !!


CL LEAVE 𝙍𝙐𝙇𝙀𝙎

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு: வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக் கும்போது, இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம், பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10க்கு மேற்பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)

3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலா து.

4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற் கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில் லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).

5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )

6. தகுதிகாண்பருவம் முடித்தவர்- நிரந்தர பணியாளர் ஆண்டு துவக் கத்திலேயே பணி நிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற் செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்தி லேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)

7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.

8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்துவிட்டு பின்னர் இதற்கான விண் ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)
Thursday, March 28, 2024

பள்ளி பராமரிப்பு தொகை பாக்கி: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

அரசு பள்ளிகளின் வருடாந்திர பராமரிப்பு தொகையை, பள்ளிக்கல்வித்துறை இன்னும் வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. அதனால், தலைமை ஆசிரியர்கள், நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகம் முழுதும், 37,000 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 47 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், பள்ளிகளின் பராமரிப்பு பணி, பள்ளிகளில் தேவைப்படும் எழுதுபொருள்கள் போன்றவற்றின் செலவுக்கு, பள்ளிக் கல்வித் துறையில் இருந்து நிதியுதவி வழங்கப்படும்.

நடப்பு கல்வி ஆண்டில், இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து தேர்வுகளும் முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், இந்தஓர் ஆண்டு முழுதும், பள்ளி பராமரிப்பு பணிகளுக்கு செலவிடப்பட்ட நிதியை, பள்ளிக்கல்வித்துறை இன்னும் வழங்கவில்லை.

இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் பள்ளியின் அலுவலக வேலைகளுக்கான செலவை, எங்கள் மாத ஊதியத்தில் மேற்கொண்டு, கல்வித்துறை வழங்கியதும், அதை எடுத்து கொள்வோம்.

இந்த ஆண்டு முதல் தவணை தொகை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதமே, 2ம் தவணை தொகை வழங்க வேண்டிய நிலையில், இன்னும் வழங்கவில்லை. இன்னும், மூன்று நாட்களில், நிதியாண்டு முடிய உள்ள நிலையில், நிதியை விரைந்து வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thursday, March 28, 2024

பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறத் தேவையில்லை - அலகாபாத் உயர் நீதிமன்றம்!!!

ஜூனியர் உயர்நிலைப் பள்ளி உதவி ஆசிரியர்களுக்கு ஆதரவாக அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 23, 2010 அன்று வெளியிடப்பட்ட ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) அறிவிப்புக்கு முன் நியமிக்கப்பட்ட இளநிலை உயர்நிலைப் பள்ளி உதவி ஆசிரியர்கள், தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறத் தேவையில்லை என்று நீதிமன்றம் அறிவித்தது.

இருப்பினும், ஆகஸ்ட் 23, 2010க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட உதவி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு தகுதி பெற TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், அடுத்த 6 மாதங்களுக்குள் தலைமையாசிரியர் பதவிக்கான பதவி உயர்வு செயல்முறையை முடிக்குமாறு உ.பி.யின் அடிப்படைக் கல்வி வாரியத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஷிவ் குமார் பாண்டே மற்றும் பலர் உள்ளிட்ட பல மனுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதி சவுரப் ஷியாம் ஷம்ஷேரி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த உதவி ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகி, உயர் தொடக்கப் பள்ளிகளுக்கான தங்களின் பதவி உயர்வு, மூத்த TET தேர்வில் தேர்ச்சி பெறாததன் அடிப்படையில் மாநில அரசால் நிறுத்தப்பட்டதாகக் கூறி, தாங்கள் போட்டியிட்ட ஒரு தேவை இல்லை. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு மற்றும் என்சிடிஇ ஆகிய இரு தரப்பிலிருந்தும் பதிலளிக்க நீதிமன்றம் கோரியது.

ஆகஸ்ட் 23, 2010 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் ஷரத்து-4ன் படி, இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு TET தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையில்லை என்று NCTE ஒரு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்தது. இருப்பினும், அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து, உயர் தொடக்கப் பள்ளிகளுக்கான பதவி உயர்வுக்கு தகுதி பெறுவதற்கு TET தேர்ச்சி பெறுவதற்கு பிந்தைய அறிவிப்பை நியமித்த தொடக்கப் பள்ளி உதவி ஆசிரியர்களுக்கான ஆணையையும் இந்த அறிவிப்பு அறிமுகப்படுத்தியது.

NCTE யிடம் இருந்து தெளிவுபடுத்தப்பட்டதை அடுத்து, ஆகஸ்ட் 23, 2010 க்கு முன் நியமிக்கப்பட்ட ஜூனியர் உயர்நிலைப் பள்ளிகளில் உதவி ஆசிரியர்களுக்கு TET ஒரு முன்நிபந்தனை இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பதவி உயர்வு செயல்முறையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆசிரியர் ஆக விரும்பும் தனிநபர்களுக்கு TET இந்தியாவில் இன்றியமையாத அளவுகோலாக நிறுவப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பதவிகளைப் பெறுவதற்கு இந்தத் தேர்வு கட்டாயத் தேவையாகும். TETக்கு கூடுதலாக, உத்தரபிரதேச அரசு சூப்பர் TET எனப்படும் மற்றொரு தகுதித் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.

TET தேர்வின் நிர்வாகம் இந்தியாவில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது, பெரும்பாலான மாநிலங்கள் TET இன் பதிப்பை ஏற்பாடு செய்கின்றன. TET நடத்துவதன் நோக்கம், 2009 இல் இயற்றப்பட்ட குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதாகும். TET சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் வாழ்நாள் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thursday, March 28, 2024

TNPSC Group I : காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு!!!



TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி வெளியானது!

இன்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13-ம் தேதி நடைபெறுகிறது.

காலிப்பணியிடங்கள் : 90

Applications are invited only through online mode for direct recruitment to the posts included in Combined Examination

TNPSC Group 1 Notification 👇