Search This Blog

Tuesday, March 25, 2014

என்னதான் செய்வாரோ அப்பா…

0 comments

என்னதான் செய்வாரோ அப்பா…

G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,Phd.,
BT ASST. TEACHER IN TAMIL
GOVT. GIRLS HR. SEC. SCHOOL, GINGEE - 604202,
ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306.
visit: gharikrishnanrettanai.blogspot.in

மாட்டுமட்டுமல்ல
மனுசனுக்கும்தா
ஓய்வு கொடுக்கணுய்யா…
அதட்டலுடன் மாமா…

இப்படியே
வீட்டு வேலைய
மட்டும் பாத்துகிட்டிருந்தா
சாப்பாட்டுக்கு
என்ன பன்றதோ…
ஏக்கத்தோடு அம்மா.

அப்பா அப்பா
பள்ளிக் கூடத்துல
கட்டடபீஸ் கேட்டாங்க
கெஞ்சலோடு நானும் என் பாப்பாவும்…

ஒனக்கு
எப்பதான் பணம் வருமோ
எங்களுக்குப் பொடவ துணி
எடுத்துக் கொடுக்க
உரிமையோடு
சித்தியும் ஆயாவும்…

ம்மா…..
ம்மா…..
வேல செஞ்சிட்டு
வைக்க இல்லாம கட்டாந்தரையில
மாடுங்க.

ம்….
என்னதான்
செய்வாரோ அப்பா…