Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 27, 2014

கண்ணன் என் காதலன்



கண்ணன் என் காதலன்

G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,Phd.,
BT ASST. TEACHER IN TAMIL
GOVT. GIRLS HR. SEC. SCHOOL, GINGEE - 604202,
ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306.
visit: gharikrishnanrettanai.blogspot.in 

கண்ணிலு ருவம்கண்டேன் – அந்த
கள்ளனு ருவங்கண்டேன்
என்னையே நானிலந்தேன் – என்னுள்
ஏக்கம் குடிகொண்டதே.

உண்ண முடியவில்லை – எனக்கு
உறக்கம் வரவுமில்லை
கண்ணில் தெரிகின்ற – அந்த
கோலத்தைக் காணவில்லை.

பஞ்சனைப் படுக்கையும் – என்னை
பற்றி எரித்ததடீ
சஞ்சல மில்லாத – மனதில்
சாந்தி துளைந்ததடீ

வஞ்சகம் செய்தவனை – என்னை
வஞ்சித்துப் போனவனை
கொஞ்சம் பொழுதேனும் – கண்டால்
குறையும் நெஞ்சுவலி.

தன்னந் தணியாக – என்னை
தவிக்க விட்டவனை
என்னநான் சொல்வேனோ – அவனை
என்னுநான் காண்பேனோ.

கண்டு களித்திடவே – கண்களும்
காத்து கிடக்குதடி
தூண்டில் மீனினைப்போல் – மனது
மாட்டித் தவிக்குதடி.

என்று வருவானோ – என்று
ஏங்கி இருக்கையிலே
கன்றினை நாடிவரும் – அந்த
காலத் துப்பசுவைபோல்

கண்ணனும் வந்தாண்டி – எனக்குள்
களிப்பைத் தந்தாண்டி
என்னையே நான்மறந்தேன் – இன்று
ஏக்கமும் தீர்ந்ததடீ

உச்சி குளிர்ந்ததடி – என்தன்
உள்ளமும் மகிழ்ந்ததடி
பச்சை நிறத்தவனை – எந்தன்
பார்வையில் பட்டவனை

கச்சியில் உறைபவனை – இன்று
கண்களில் கண்டதனால்
அச்சமும் வந்ததடி – எனக்குள்
அழகும் வந்ததடி,