Saturday, May 2, 2015

இனியவை நாற்பது - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

இனியவை நாற்பது

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.
  • எவை எவை வாழ்விற்கு இன்பம் தரும் என்று கூறுகிறது.
  • "ஊனினைத் தின்று ஊனினைப் பெருக்காமை இனிது"
  • "மானம் அறிந்தபின் வாழாமை முன் இனிதே"
  • மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றியது.
  • சைவ சமயத்தைச் சார்ந்தவர்.
  • ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
  • இந்நூல்  நாற்பது வெண்பாக்களினால் ஆனது.
  • உலகில் நல்ல அல்லது இனிமையான விஷயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கமாகும்.
  • மொத்தம் 124 இனிய செயல்களைத் தொகுத்துக் கூறுகிறது.
  • இதன் கடவுள் வாழ்த்து சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மூவரையும் போற்றி வணங்குகிறது.
ஊனைத் தின்று ஊணைப் பெருக்காமை முன்இனிதே’
‘ஒப்ப முடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிதே’
‘வருவாய் அறிந்து வழங்கல் இனிது’
‘தடமென் பனைத்தோள் தளிர்இய லாரை

விடமென்று உணர்தல் இனிது’

No comments:

Post a Comment