![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO1Atnhy42ceV6w2PXQh4bJtVljRf4Qt0OBHzqr0J_3cq1f-YKZ32LIZd35TrU4UBYgF_HRNNHSgrL56TujupEtBoH_4_cB7PbWyo4laXopKyjHX6q4HLP6PxwzpM2WGGrJBlRRFu8WLQ/s280/daa6a5cb4ae07a7cae56b5bfbd7dc7b2.jpg)
இனிப்பு மற்றும் துவர்ப்பு இரண்டும் சேர்ந்து பழம் என்றால் நாவல் பழம் மட்டுமே. நாவல் பழத்தில் உள்ள நன்மைகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
நாவல் பழம் அன்டோசியான், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பாக்கிஸ்தான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் பரவலாக கிடைக்கிறது. நாவல் பழ மரங்கள் காடுகளில் வளர்கின்றன மற்றும் சாலையில் கூட வளரும்.
நாவல் பழம் நீரிழிவுக்கான சிறந்த சிகிச்சை உணவாக அறியப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் நாவல் பழம் விதைகள் இரத்தில் உள்ள சர்க்கரையை குறைப்பதில் உதவுகிறது என்று கூறுகிறார்கள். நாவல் பழம் சாறு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நாவல் பழம் மரத்தின் மரப்பட்டை நுரையீரல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. 1/2 டீஸ்பூன் மரப்பட்டை தூள் மற்றும் ஒரு கரண்டி சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்த்தொற்று மற்றும் சிறுநீரகம் செயலிழப்பதை தடுக்க முடியும். தண்ணீரில் கலந்து கூட மரப்பட்டை தூளை சாப்பிடலாம். தொற்று நோய் கட்டுப்படுத்தவும் நாவல் மர பட்டை உதவுகிறது.
நாவல் பழம் சாப்பிடுவது புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. நாவல் பழத்தில் பாலிபினால்களை, பைட்டோகெமிக்கல்கள் நிறைந்துள்ளது. இது புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடி அழிக்கிறது.
சில இந்து கலாச்சாரங்களில் நாவல் பழம் மரத்தின் இலைகள், பட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. நாவல் பழ மர பட்டையை எரித்து சாம்பல் ஆக்கி பற்கள் துலக்கினால் பற்கள் வலிமை பல மடங்கு அதிகரிக்கும்.