டி.என்.பி.எஸ்.சி. 1199 குரூப்-2 பணிகள்

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,199 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 



இது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியிடங்களுக்கு வி்ண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். சில பணிகளுக்கு 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். 



9-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். செப்டம்பர் 11-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம். இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு நவம்பர் 11-ந் தேதி நடைபெறும். அந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வும், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முக தேர்வும் நடத்தப்படும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

Total Pageviews

Categories