அரசாணை 114 நாள் 27.08.2018 ன்படி விருப்பமுள்ள அரசு ஊழியர் ஆசிரியர்களிடம் மட்டும் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விருப்பக்கடிதம் பெற்றுக்கொண்டு ஆகஸ்டு18 அல்லது செப்18 ஊதியத்தில் கேரள வெள்ள நிவாரண நிதி பிடித்தம் செய்யுமாறு அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஒருநாள் ஊதியம் பிடித்தம் என்பது கட்டாயமில்லை. இதற்கு முன்பே தாங்களாகவே கேரள வெள்ள நிவாரண உதவி மற்றும் நிதி வழங்கியுள்ளவர்கள் தங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே விருப்பப் கடிதம் கொடுத்தால் மட்டுமே ஒருநாள் ஊதியம் பிடிக்க வாய்ப்புள்ளது. அரசாணையின்படி ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு ஊழியரின் விருப்பமின்றி ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அதிகாரம் இல்லை.
Click here- to download individual application for govt staffs