Subscribe Us

Saturday, October 27, 2018

3 நிமிடத்தில் 130 திருக்குறளை ஒப்பித்த மாணவிக்கு அமைச்சர் பாராட்டு!

பவானி அருகே, அம்மாபேட்டை யூனியன், செம்படாபாளையம்
கிராம அரசு நடுநிலைப்பள்ளியில், ஆங்கில பயிற்சி பெற்ற 60 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் கருப்பணன் பங்கேற்றார்.



அப்பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி தீபிகா, அமைச்சர் முன்னிலையில், மூன்று நிமிடங்களில், 130 திருக்குறளை ஒப்பித்தார். மாணவிக்கு, சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, அமைச்சர் பாராட்டினார்