தேவகோட்டையி கடந்த சில நாட்களாக தொடர்ந்து
மழை பெய்து வருகிறது. தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மக்கள் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் நிலவேம்பு கஷாயம் மாணவர்களுக்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.
ஆனால் இந்த மாதம் வழங்க வேண்டிய நிலவேம்பு கஷாயம் பள்ளிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.





