JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, November 26, 2018

10, 11, 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு...? - செங்கோட்டையன் ஆலோசனை

கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 




இதனால், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வுகளை தள்ளி வைக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, கல்வித் துறை ஆலோசித்து வந்தது. இந்நிலையில், 10 நாட்களுக்கு பிறகு, தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.



இந்த ஆலோசனை கூட்டத்தில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment