Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 20, 2018

சேதம் அடைந்த பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் அவற்றின் சேத மதிப்பு விவரங்களை சேகரிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.


கஜா புயல் வீடுகளில் வெள்ளம் புகுந்ததாலும், இடிபாடுகளாலும் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்கள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.



இது குறித்து தகவல் அறிந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.



இதன்பேரில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சேதம் அடைந்த பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் அவற்றின் சேத மதிப்பு, பாடப்புத்தகங்கள் இழந்த பள்ளி மாணவர்கள் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவரங்கள் பெற்றதும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment