ராகிங்: உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி மீண்டும் அறிவுறுத்தல்

உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங்கை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்.





கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்

Join Our WhatsApp Group Click Here

Join Our Facebook Page Click Here


உயர் கல்வி நிறுவன வளாகங்களில் ராகிங்கைத் தடுப்பதற்கான வழிகாட்டுதலை யுஜிசி ஏற்கெனவே உருவாக்கியிருக்கிறது. அதன்படி, கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு மையம் உருவாக்குதல், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துதல், விழிப்புணர்வு பயிலரங்குகளை நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த வழிகாட்டுதலை பின்பற்றாத கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.





கட்டணமில்லா புகார் எண்: ராகிங்கால் பாதிக்கப்படும் மாணவர்கள் 18001805522 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அல்லது helpline@antiragging.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குப் புகார் தெரிவிக்கலாம். மேலும், 09871170303, 09818400116 என்ற செல்லிடப்பேசி எண்களை அவசரக்கால புகார்களுக்கு மட்டும் தொடர்பு கொள்ளலாம் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.





Share:

Categories