அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் ஆரம்பப் பள்ளிகளை இணைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதனையடுத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஆரம்பப் பள்ளிகளின் விவரங்களை தெரிவிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அருகில் உள்ள பள்ளிகளோடு இணைப்பு என்பது பள்ளிகளை மூடுவதுதான் என ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.





