அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி மாறுதல் செய்வதற்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு...

அங்கன்வாடி ஆசிரியர் நியமனத்திற்கு தடை பெற்றது 2009 & TET போராட்டக்குழு!



அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி மாறுதல் செய்வதற்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு..

அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணி இறக்கம் செய்ப்பட்ட ஆணையை எதிர்த்து நமது போராட்ட குழுவின் சார்பாக திரு.பால் பிரின்ஸ் என்ற பாதிக்கப்பட்ட ஆசிரியரை கொண்டு வழக்கு எண்-1091/ 2019 தொடர்ந்து இருந்தோம்.



அந்த வழக்கு இன்று காலை 11.30-மணி அளவில் விசாரணைக்கு வந்தது ,அரசு தரப்பில் பல தவறான வாதங்களை முன் வைத்தனர் ஆனால் NCTE விதிகளை தாண்டி எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி 31.01.2019 வரை இடைக்கால தடைவிதித்ததுள்ளது நீதிமன்றம்.நண்பர்களே அரசு செய்யும் அனைத்தும் சரி என்று தன்னிச்சையான எடுக்கும் முடிவிற்கு இது ஒரு திருப்புமுனையாக அமையும் நம் தேசத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது.
Share:

Categories