Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 19, 2019

மாணவர்களுக்கு தேர்தல் வழிகாட்டி





பள்ளி, கல்லுாரிகளில் கல்வியறிவு மன்றங்கள் (Election literacy club) துவங்கி இளம், வருங்கால வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.'தேர்தல் துாதுவர்' என்ற பிரதிநிதிகள் விழிப்புணர்வு பணியில் ஈடுபடுபட்டனர். பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் நடைமுறைகளில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.தேர்தல் அதிகாரி கூறுகையில், ''ஒன்பதாம் வகுப்பு- பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு வழிகாட்டி புத்தகங்கள் வழங்குவதால் ஓட்டுப்பதிவு, இயந்திர பயன்பாட்டின் தொழில்நுட்பம் தெரிந்து கொள்வர். இதனால் வரும்காலங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்'' என்றார்