Breaking

Friday, February 8, 2019

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்ற படுமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்


கேள்வி: ஆசிரியர்கள் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையும் ஒன்று.என்ன செய்யப்போகிறீர்கள்?

அமைச்சர் செங்கோட்டையன் பதில்: 30.05.2009 க்குப் பின்னர் பணிகளில் சேர்ந்தவர்களுக்கும் அதற்கு முன்னர் பணியில் உள்ளவர்களுக்கும் ஊதிய வேறுபாடு பெருமளவு உள்ளது என்கிற குற்றச்சாட்டைத்தான் வைத்தார்கள். அவர்கள் பணியில் அமர்த்தப்படும் போதே ஊதியம் குறைவு என்பது ஒப்புதல் பெறப்பட்டே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில்தான் துறையை நடத்த முடியும். அன்றைய நிதி நிலையைக் கருத்தில் கொண்டுதான் அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டது, அதை ஒப்புக்கொண்டுதான் இவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். - (இவ்வார ஆனந்த விகடன் பேட்டியில்)