Breaking

Friday, February 15, 2019

வதந்திகளை நம்ப வேண்டாம்... - பி.எஸ்.என்.எல் நிறுவனம்


பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் தொடர்ந்து சரிவை சந்தித்துவருகிறது அதனால் நிறுவனத்தை மூடும் முடிவில் அரசு இறங்கியுள்ளது.



அதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்துவருகிறது என தொடர்ந்து தகவல்கள் வெளியாகியிருந்தது. மேலும் சரிவை சரிக்கட்ட நிறுவனத்தில் இருந்து 35,000 பணியாளர்களை குறைக்கப்போவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் இன்று பி.எஸ்.என்.எல் நிறுவனம், நிறுவனத்தை மூடும் எண்ணம் எதுவும் இல்லை. வதந்திகளை மக்களும், ஊழியர்களும் நம்ப வேண்டாம் என்று ஒரு அறிக்கையை விடுத்துள்ளது.