Breaking

Wednesday, February 6, 2019

சங்க இலக்கியகள்


பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் என்பதால் சங்க இலக்கியங்கள் எனப்பட்டது
கி.மு. 2 நூற்றாண்டு முதல் கி.பி. 2 நூற்றாண்டுவரை உள்ள இடைப்பட்டக் காலத்தைச் சங்க காலம் என்பர்.
சங்க இலக்கிய செய்யுட்களைச் சான்றோர் செய்யுட்கள் என்று கூறுவார் பேராசிரியர்.
சங்க இலக்கிய ங்களைத் தொகை, பாட்டு என இரண்டாகப் பிரிப்பர்.
பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பைத் தொகை என்றும் தனி ஒரு புலவர் பாடிய பாடலைப் பாட்டு என்றும் கூறுவர்
தொகை என்பது எட்டுத்தொகையையும், பாட்டு என்பது பத்துப்பாட்டையும் குறிக்கும்.
எட்டுத்தொகை என்பது எட்டுத் தொகை நூல்களின் தொகுப்பாகும்.
சங்க இலக்கியங்களைத் திணை இலக்கியங்கள் என்றும் கூறுவர்.
இவற்றை பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும் கூறுவர்.
எட்டுத் தொகையில் எட்டுத் தொகை நூல்கள் உள்ளன. அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநாநூறு என்பனவாகும். இவற்றைத் தொகுத்து,