Search This Blog

Sunday, March 24, 2019

மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு  ஆன்லைன் கலந்தாய்வு ஏப் 1-ல் தொடக்கம் 

0 comments
தமிழகத்தில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு ஏப். 1-ல் தொடங்குகிறது. 2019-2020-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைனில் வரும் ஏப். 1-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து 5-ம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.

நாடுமுழுவதும் மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வில் பங்கேற்ற தமிழ கத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் தகுதி பெற்றனர். நீட் தேர்வில் தகுதிபெற்றவர்கள் மருத்துவப் பட்டமேற்படிப்பு களுக்கு ஆன்லைனில் விண்ணப் பித்திருந்தனர். தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் முறை யாக மருத்துவப் பட்டமேற் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதும், கலந்தாய்வும் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.