Monday, March 11, 2019

பள்ளி, கல்லூரி வளாகங்களின் அருகே பிரச்சாரம் செய்ய கூடாது!

சென்னையில் 38.2 லட்சம் வாக்காளர்கள் மற்றும் 3754 வாக்கு சாவடிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


மேலும், சமூகவலைதளங்கள் கண்காணிக்கப்படும், பள்ளி, கல்லூரி வளாகங்களின் அருகே பிரச்சாரம் செய்ய கூடாது, சென்னையில் மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.