JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, March 10, 2019

மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை


விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 52 பணியிடங்களுக்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 52


பணி: பதிவறை எழுத்தர் - 08
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: அலுவலக உதவியாளர் - 30
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுவிரும்பத்தக்கது.


பணி: இரவு காவலர் - 11
தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
பணி: துப்புரவு பணியாளர் - 03
தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில்தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: www.districts.ecourts.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளவிண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்,
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், விழுப்புரம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.districts.ecourts.gov.inஎன்ற இணையதளத்தில்கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18. 03.2019