Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Saturday, May 25, 2019

அரசுப் பள்ளியில் படித்தவர்களே திறமைசாலிகள் - மயில்சாமி அண்ணாதுரை


அரசுப் படித்த விஞ்ஞானிகளே இன்றைக்கு சந்திராயனை விண்ணிற்கு அனுப்பும் சாதனை செய்ததாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


அரசுப் பள்ளிகளை பாதுகாக்ககோரி இந்திய மாணவர் சங்கம் நடத்தும் சைக்கிள் பேரணியை கோவையில் துவக்கி வைத்து பேசிய அவர் , அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் இன்றைக்கு உயர்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கே திறமையும்,புத்திசாலித்தனமும் அதிகம் இருப்பதாகவும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.