பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை: அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் ஊக்கத் தொகை விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையத்தில் பதிவேற்றம் செய் யப்பட்டது. அவற்றை சீராய்வு செய்தபோது சில பள்ளிகளில் பதிவுகள் மேற்கொள்ளப்படாத தும், சில பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் தகுதியற்ற மாணவர்கள் இருப்பதும் கண்டறி யப்பட்டன. எனவே, பட்டியலை ஆய்வு செய்து விவரம் சரிதானா என்பதை சரிபார்த்து அதிகாரிகள் அறிக்கை தர வேண்டும்.