Breaking

Thursday, June 13, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம்.! பெற்றோர்கள் வரவேற்பு.!!


தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு QR கோடுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு நாளை முதல் வழங்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழக முதலமைச்சர் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் காடு வழங்கும் திட்டத்தை நாளை தொடங்க உள்ளதாக கூறினார். மேலும் தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் அரசு பள்ளியில் விரைவில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்க உள்ளதாக கூறினார்



அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், மாணவர்களின் உடல்நிலை பற்றிய நிலவரம் மற்றும் பள்ளிக்கு வருகிறார்களா என்பதை பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வீட்டில் உள்ள செல்போன் நம்பருக்கு குறுந்செய்தி(sms) அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.