Breaking

Tuesday, June 4, 2019

ஆளுநர் மாளிகையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!



சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் (ராஜ் பவன்) காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Personal Clerk

காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது.
தகுதி: பிஏ, பி.எஸ்சி, பி.காம் இளங்கலை படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Driver

காலியிடங்கள்: 03

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்த்தியுடன் இலகுரக வாகனங்களின் ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



பணி: Office Assistant

காலியிடங்கள்: 02

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆன்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய முழுவிபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy Secretary to Governor & Comptroller, Governor's Secretariat, Governor's Household Office, Raj Bhavan, Chennai - 600 022

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.06.2019