Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 10, 2019

ஒருமணி நேரத்தில் ஓட்டுநர் உரிமம்: போக்குவரத்துத் துறை ஆணையர் தகவல்



புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் ஓட்டுநர் உரிமம் பெறலாம் என போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்தார்.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு முக்கிய பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து போக்குவரத்து அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து போக்குவரத்துத் துறை ஆணையர் சமயமூர்த்தி கூறியதாவது: வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளைப் போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் பகுதியாக புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
இதே போல், அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகமும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால், இனி ஓட்டுநர் உரிமம் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பத்துடன் இனி தடையில்லாச் சான்றை இணைக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும், ஆன்லைன் விண்ணப்பதாரர்கள், அனைத்து விண்ணப்பங்களிலும் செல்லிடப்பேசி எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைத் தவறாமல் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு விரைவாக தகவல் அனுப்பவும், சிறந்த முறையில் சேவை அளிக்கவும் முடியும் என்றார்.