Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Thursday, July 18, 2019

பி.எட். கலந்தாய்வு: நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

இரண்டு ஆண்டுகள் பி.எட். (கல்வியியல் கல்வி) படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் இந்தக் கலந்தாய்வை நேரடி ஒற்றைச் சாளர முறையில் நடத்த உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 2,040 பி.எட். படிப்பு இடங்களில் 2019-20 கல்வியாண்டுக்கான சேர்க்கை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது.


இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை வெளியாக உள்ளது. அதன்படி, கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது.
ஜூலை 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூலை 29 கடைசி நாளாகும்.
விண்ணப்பக் கட்டணத்தைப் பொருத்தவரை பொதுப் பிரிவினருக்கு ரூ. 500 என்ற அளவிலும், எஸ்.சி., எஸ்.டி., எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ. 250 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் விவரங்களை www.ladywillingdon.com என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.