Join THAMIZHKADAL WhatsApp Groups

இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியான திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி: குரூப் எக்ஸ்: விண்ணப்பதாரர்கள் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2, இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்): விண்ணப்பதாரர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2, இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்): மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சியில் சேர விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2, இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21க்குள் இருக்க வேண்டும். அதாவது 19.07.1999 மற்றும் 01.0.2003 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திலும், ஆகிய இரு தேதிகளிலும் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
பணி காலம்: 20 ஆண்டுகள் கொண்டது. பின்னர் விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப 57 வயது வரையும் பணி நீடிப்பு பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.airmenselection.cdac.in என்ற இணைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2019
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.09.2019 முதல் 24.09.2019 தேதி வரை நடக்கிறது.
மேலும் முழுமையான விவரங்களை அறிய www.airmenselection.cdac.in அல்லது www.careerindianair force.cdac.in ஆகிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.