Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 11, 2019

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலை




மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வரும் மவுலான ஆசாத் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (maulana azad nationl institute of technology) காலியாக உள்ள 144 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்:

Assistant Professor Grade-II பிரிவில் 69 பணியிடங்களும், Associate Professor பிரிவில் 49 பணியிடங்களும் Professor பிரிவில் 26 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:



பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இசிஇ, சிஎஸ்இ, போன்ற பிரிவுகளில் அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அறிவியல், மற்றும் பொருளாதாரம், உளவியல், சமூகவியல் இவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் படித்து முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

Assistant Professor Grade-II பணியிடங்களுக்கு ரூ.70.900 வரையும், Associate Professor பணியிடங்களுக்கு ரூ.1,39,600 வரையும், Professor பணியிடங்களுக்கு 1,59,100 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.manit.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்கள் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி 26.08.2019