Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 25, 2019

தற்போதைய நிலவரப்படி பணிநிரவல்: தொடக்க கல்வி துறையில் நடவடிக்கை

தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், தற்போதைய நிலவரப்படி, உபரி ஆசிரியர் பணியிடங்களை, பணிநிரவல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், 2018, ஆக., 1 நிலவரப்படி, மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கேற்ப, உபரி மற்றும் பற்றாக்குறை ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டன. அதற்கான பணிநிரவல், கடந்த மாதம் நடக்கவிருந்த நிலையில், வேலூர் தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டது.


தற்போது, பணிநிரவல் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், மீண்டும் தற்போதைய நிலவரப்படி, கூடுதல் பணியிடங்கள் தேவைப்படும் பள்ளிகள், ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள பள்ளிகளை கணக்கிட்டு, அவற்றில் உபரி ஆசிரியர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment