
இந்தியா தற்போது, டிஜிட்டல் யுகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இதனால் பணத்தை தவிர்த்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு நாம் மாறி வருகின்றோம்.இதில், பேடிஏம், கூகுள்பே, போன்பே, எம்ஐ பே, ஏர்டெல் மணி உள்ளிட்ட பல்வேறு ஆப்களையும் நாம் பயன்படுத்தி வருகின்றோம்.
இந்நிலையில், அதில் இதுபோன்ற பேக்களை பயன்படுத்தினாலும் பொது மக்கள் ஆகிய நாம் உஷராக இருக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. இதனால் கீழ் காணம் ஆப்களை டவுன்லோடு செய்யமால் இருக்க வேண்டும்.டிஜிட்டல் பேமெண்ட்:
பணம் இல்லாத போன் பரிவர்த்தனைக்காக நாம் பேடிஏம் எனப்படும் செயலியை அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். நாம் பல்வேறு இடங்களுக்கு சென்றாலும், நாம் எதை நுகர்ந்தாலும் டிஜிட்டல் பேமண்ட் வழியாக நாம் பணம் செலுத்தி வருகின்றோம்.
இந்தியாவில் ஏராளமானோர் பேடிஎம் எனப்படும் செயலியை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் எளிமையாக பணப் பரிவர்த்தனை செய்து செய்து வருகின்றனர்.
நாட்டில் பல்வேறு நகரங்களிலும் இந்த ஆப்பை பயன்படுத்துவது அதிமாக இருக்கின்றது. சில்லறை கடை முதல் பெரிய டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் வரை இதை பயன்படுத்தி பணம் செலுத்தி வருகின்றனர்.
இந்த பயனர்கள் கேயுசி செய்யும் போது, கவனமாக இருக்க வேண்டும்.
KYC அப்டேட் செய்யும்போது சில போலி செயலிகளை நீங்கள் மொபைலில் டவுன்லோடு செய்தால் ஆன்லைன் வங்கி மோசடியாளர்களின் கையில் சிக்கும் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்களை செய்யும் போது, மோசடியாளர்கள் கையில் சிக்க வாய்ப்புள்ளது. போலி ஆப் நமது அனைத்து விவரங்களும் பறிபோகும். இதனால் Any Desk, Quicks Port போன்ற செயலிகளை Paytm பயனாளர்கள் பதிவிறக்கம் செய்யக்கூடாது. UPI பேமன்ட் செயலிகளான போன் பே, கூகுள், எம்ஐ பே, ஏர்டெல் மணி உள்ளிட்ட பல்வேறு செயலிகள் அடங்கும்.
சமீப காலமாக மோசடியாளர்கள் தொடர்ந்து Any Desk, Team Quer போன்ற செயலிகள் மூலம் ஆன்லைன் பேமன்ட் முறையைப் பின்பற்றும் பயனாளர்களின் வங்கிக்கணக்கை ஹேக் செய்து அவர்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் குற்றச்செயல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக Paytm பயனாளர்களையே பல மோசடிக் கும்பல்களும் மொபைல் ஹேக்கிங் மூலம் ஏமாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.