பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத 19,427 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:
பள்ளிக் கல்வித் துறையில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாகவும், தற்காலிக பணியிடங்களாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் தற்காலிக பணியிடங்களுக்கு பணியிட தொடர் நீட்டிப்பு வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு தமிழக முதல்வரின் உத்தரவுப்படி 19,427 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்கள், நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என அதில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:
பள்ளிக் கல்வித் துறையில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாகவும், தற்காலிக பணியிடங்களாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் தற்காலிக பணியிடங்களுக்கு பணியிட தொடர் நீட்டிப்பு வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு தமிழக முதல்வரின் உத்தரவுப்படி 19,427 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்கள், நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment