Search This Blog

Tuesday, September 24, 2019

புதிய ஓய்வூதியம்: அரசாணை வெளியீடு

0 comments
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தால், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் மட்டுமே, அவருடைய குடும்பத்தாருக்கு, ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றி இருந்தாலும், அவருடைய குடும்பத்தாருக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய நடைமுறை, அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment