Search This Blog

Wednesday, September 4, 2019

கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

0 comments
சென்னை: சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில், 203 உதவியாளர் பணிக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.கூட்டுறவு துறையின் கீழ், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில், உதவியாளர் பணியிடங்கள், அதிகமாக காலியாக உள்ளன. ஒவ்வொரு வங்கிக்கும் தேவைப்படும் உதவியாளர்கள்,

மாவட்ட கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையம் வாயிலாக, தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், காலியாக உள்ள, 203 உதவியாளர் பதவிக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கூட்டுறவு சார்ந்த படிப்பு முடித்தவர்கள், இந்த தேர்வுக்கு, www.chndrb.in என்ற, இணையதள முகவரியில், 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment