Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 11, 2019

10-வது தேர்ச்சியா? கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு!


இந்திய கடலோர காவல்படையின் ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் கடலோர காவல்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய கடலோர காவல் படை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : நேவிக் பிரிவில் சமையலர், மேற்பார்வையாளர்

வயது வரம்பு : 1 ஏப்ரல் 2020 தேதியின்படி, 18 முதல் 22 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.



ஊதியம் :

நேவிக் சமையலர், மேற்பார்வையாளர் பணிக்கு அடிப்படை ஊதியம் ரூ. 21,700

அடுத்தடுத்து பதவி உயர்வின் போது மாதம் ரூ.47,600 வரையில்

அதிகாரப்பூர்வ இணையதளம் : joinindiancoastguard.gov.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

முக்கிய தேதிகள்:
விண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : அக்டோபர் 30, 2019
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : நவம்பர் 08, 2019

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.



குறிப்பு : இதற்கு மொத்தம் 5 மண்டலங்களாக விண்ணப்பிக்கும் முறை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கிழக்கு மண்டலம் (Eastern Zone) தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://joinindiancoastguard.gov.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கைக் காணவும்.