Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, October 27, 2019

தீபாவளியும் வெந்நீர் குளியலும்

!
ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்ற ஒரு நகரம். இதற்கு ஒளி மிக்க நகரம் என்று பொருள். இந்த நகரம் தான் இன்றைய அசாம் தலைநகர் கவுகாத்தி. ஊரின் பெயிரில் இருக்கும் ஒளி,நகரை ஆட்சி செய்த மன்னன் நரகாசுரனுக்கு இல்லை.இத்தனைக்கும் இவன் மகா விஷ்ணுவின் மகன்.ஒரு சமயம் அசுரன் ஒருவன் பிரம்மாவிடம் இருந்த வேதங்களைப் பறித்துக் கொண்டு பாதாள உலகத்தில் ஒளிந்தான். வேதங்களை மீட்க, விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் நுழைந்தார்.



அப்போது அவரது ஸ்பரிசம் பூமா தேவியின் மீது பட்டதால் ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு 'பவுமன்' பிள்ளை என்பது பொருள். பொறுமை மிக்க தாய்க்குப் பிறந்த பவுமன் தவ ஆற்றலுடன் வளர்ந்தான். அதன் மூலம் எந்நாளும் அழியாத வரத்தைப் பிரம்மாவிடம் பெற்றான். அவனது தாயைத் தவிர வேறு யாராலும் அவனைக் கொல்ல முடியாது என்பதே அது. இந்நிலையில் பல தலை முறைகளைக் கடந்து வாழ்ந்தான் பவுமன்.அவனது அட்டகாசம் அதகரித்தது. எல்லா உயிர்களையும் துவம்சம் செய்தான்.

விஷ்ணுவின் மகன் என்பதால் அவனை குறை சொல்லும் தைரியம் யாருக்குமில்லை. ஆனாலும் ஒரு கட்டத்தில் விஷ்ணுவின் கவனத்திற்கு விஷயம் போனது. அவர் பூலோகத்தில் கிருஷ்ணாவதாரம் எடுத்திருந்தார். பூமாதேவி அப்போது சத்ராஜித் என்ற மன்னனின் மகளாகப் பிறந்திருந்தாள்.



அப்போது அவளது பெயர் சத்யபாமா.சத்யபாமாவை கிருஷ்ணர் திருமணம் செய்தார். பூலோகப் பிறப்பின் காரணமாக பூமாதேவிக்கு முற்பிறவி நினைவுகள் இல்லை. அவளுக்கு 'பவுமன்' என்றொரு மகன் இருப்பதே மறந்து போனது. இந்நிலையில் கிருஷ்ணர் பவுமனுடன் போருக்குப் புறப்பட்டார்.

சத்யபாமா தேரோட்டுவதில் வல்லவள் என்பதால் கணவருக்கு சாரதியாக சென்றாள். பவுமன் , தோற்றத்தில் நரனாக (மனிதன்) இருந்தாலும் அசுர குணங்களை கொண்டிருந்ததால் 'நரகாசுரன்' எனப்பெயர் பெற்றிருந்தான்.மகன் என்றும் பாராமல் , தர்மத்தை காக்க, நரகாசுரனுடன் விஷ்ணு போரிட்டார். அவரால், அவனை கொல்ல முடியாது. அது நரகாசுரன் பெற் வரத்தின் விளைவு.

எனவே அவனது அம்பு பட்டு மயங்குவது போல நடித்தார். கணவரது உயிருக்கு ஆபத்து நேரும் என்ற நிலையில், தேரில் இருந்த சத்யபாமா, வெகுண்டெழுந்தாள். ஓர் அம்பை நரகாசுரன் மீது எய்தாள்.அப்போது அவன் மயங்கி விழவே அம்பு எய்தவள் தாய் என்பது புரிந்தது. "அம்மா!



அடங்காத பிள்ளை யாக வளர்ந்த என்னை மன்னித்து விடு. உன்கையால் உயிரை இழப்பது மகிழ்ச்சியே. என் மரணத்தை உலகமே விளக்கேற்றி கொண்டாட வேண்டும். அந்த வரத்தை எனக்கு தருவாயா?" எனக் கேட்டான்.அதன் பிறகே பெற்ற மகனைக் கொல்லும் பாவியாக நிற்பதை உணர்ந்தாள் பூமாதேவி.

இருப்பினும் மனதை தேற்றி " மகனே! நீ கேட்ட வரத்தை அளிக்கிறேன்' என்றாள். நரகாசுரனின் உயிர் பிரிந்தது. அந்த நிலையிலும் மக்களுக்கு கஷ்டம் வரக்கூடாது என்ற நிலையில் மேலும் சில வரங்களை வழங்கினாள்.

அதில் ஒன்று தான் , தீபாவளியன்று அதிகாலையில் வெந்நீரில் குளிப்பது. பொதுவாக , காலையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பது நியதி. ஆனாலும் ஐப்பசி அதிகாலை குளிரில் நடுங்க கூடாது என்பதால் வெந்நீரில் குளிக்க அனுமதித்தாள். அதையறிந்த கங்காதேவி தான் அந்த வெந்நீரில் வாசம் செய்வாக , தன் பங்குக்கு வரம் அளித்தாள். அதனால் தீபாவளி குளியலை 'கங்கா ஸ்நானம்' எனச் சொல்கிறோம்.தீபாவளி நன்னாளில் , தெய்வத்தாயானா பூமியை பாதுகாக்க, உறுதி ஏற்போம்.